கசாகூளம்

பத்து உலகத்திரைப்படங்கள்

ஏப்ரல் 12, 2009 · 3 மறுமொழிகள்

என்னை யாரும் ஒரு நாலு நல்ல உலக திரைப்படம் சொல்லுன்னு கேட்காவிட்டாலும், கருத்து கந்தசாமியாகிய நான் இங்கும் வந்து என் கருத்து சொல்லவேண்டிய நிலை. காரணம் ரவி. எனக்கு மிகவும் பிடித்த உலகத்திரைப்படங்கள் (இந்திய திரைப்படங்கள் தவிர்த்த மற்ற படங்கள் தான் இந்த இடத்தில் உலகத் திரைப்படம் என்று எண்ணுகிறேன்).

நான் அழைக்கும் மற்ற மூன்று பேர்:

→ 3 மறுமொழிகள்பகுப்புகள்: குறிப்புகள்
குறிச்சொற்கள்: ,

Bernard Bate

மார்ச் 17, 2009 · 2 மறுமொழிகள்

இன்று காலை கலைஞர் தொலைக்காட்சியில், ரமேஷ் பிரபாவுடன் ஒருவர் அழகான தமிழில் உரையாடிக்கொண்டிருந்தார். பார்க்க வெற்றுநாட்டவர் போல இருந்ததால், அலுவலகம் கிளம்புவதை சற்றே தள்ளிப்போட்டுவிட்டு பார்க்கத்தொடங்க்கினேன். அந்த மனிதர், பெர்னார்ட் பேட் என்ற யேல் பல்கலைக்கழக பேராசிரியர். தமிழின் மேடைப்பேச்சு பற்றியும், திராவிட கட்சிகள் வந்த பிறகு அதில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றியும், மிக அழகான தமிழில் (செந்தமிழ் அல்ல பேச்சுவழக்குதான்), ஆர்வத்தோடு கேட்கத் தூண்டுமாறு உரையாடிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன கருத்துக்கள் சில: 

  • திராவிடக் கட்சிகள் வந்த பிறகுதான் மேடையில் செந்தமிழில் பேச ஆரம்பித்தனர். மக்களுக்கு சற்றே அந்நியமான இந்த மொழிநடையே அவர்களின் வெற்றிக்கு ஒரு காரணமோ என்றெண்ணும் வகையில் மக்களிடம் மிக வரவேற்பு பெற்றுள்ளது.
  • டீக்கடை அரசியல் கலாச்சாரம் என்பது, மற்ற நாட்டு மக்களுக்கு மிகவும் புதிதானது, விசித்திரமானது. இங்குள்ள எழுத்தறிவில்லாத மக்கள் பல செய்திகளை, டீக்கடை விவாதம் மூலமாக மட்டு அறிந்து கொண்டுள்ளனர். ஒபாமா பற்றி நுணுக்கமாகவும், சிங்கள இனவாதம் பற்றியும் எழுத-படிக்க தெரியாத ஆட்டோ ஓட்டுநர்கள் கூட, தன்னிடம் ஆர்வத்தோடு விவாதிக்கின்றார்கள் என்று ஆச்சரியப்பட்டார்.

நானோ, ஆங்கில சொற்கள் பலவற்றை தவிர்த்து, சரளமாக பேசும் இவர் மொழிநடையைக்கண்டு வியப்பில் ஆழ்ந்திருந்தேன். இருபது ஆண்டுகளுக்கு முன்னரே மதுரை வந்து தமிழ் கற்றுக்கொண்டதாகவும், தமிழ் மொழியின் இனிமை தன்னை கவர்ந்தது என்றும் “என் இனிய தமிழ் மக்களே” என்று பாரதிராஜா போல குரல் மாற்றி பேசி, உங்களுக்கு பிடித்த உணவு எது என்ற கேள்விக்கு “ரஜினிகாந்த் ஒரு படத்தில் சொல்வாரே, அது போல “நேத்தி வச்ச மீன்குழம்பு” தான் எனக்கு மிகவும் பிடிக்கும்” என்றெல்லாம் அவர் கதைத்துக்கொண்டிருக்கையில் நான் எதனால் மிகவும் சந்தோஷம் அடைந்தேன் என்று எனக்கே தெரியவில்லை.

இவரைப்பற்றி இணையத்தில் தேடியதில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிட்டின. சுந்தர ராமசாமியின் “அடைக்கலம்” , அம்பையின் ”வீட்டின் மூலையில் ஒரு சமையலரை” போன்ற சிறுகதைகளை, ஜாம்பவான் ஏ.கே.ராமானுஜனுடன் இணைந்து மொழிபெயர்த்துள்ளார். ”பண்பாட்டு அசைவுகள்” என்ற அருமையான கட்டுரைத் தொகுப்பு எழுதிய முனைவர். தொ.பரமசிவம் அவர்களின் மற்றொரு நூலான “அறியப்படாத தமிழகம்” தனை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்துக்கொண்டிருக்கிறார்.

இந்த உரையாடலின் வீடியோ கிடைத்தால் பிறகு பதிவு செய்கிறேன்.

→ 2 மறுமொழிகள்பகுப்புகள்: குறிப்புகள்
குறிச்சொற்கள்: ,

எஸ்.இளையராஜா – திராவிட பெண்கள்

மார்ச் 11, 2009 · 9 மறுமொழிகள்

எனக்கு இயக்குநர் பாலுமகேந்திரா பிடித்து போன பல காரணங்களில் ஒன்று: அவருடைய முக்கியமான நாயகிகள் பலர் மாநிறம் அல்லது வெளுப்பு/சிவப்பு இல்லா நிறம் கொண்டவர்கள் (ஸ்ரீதேவி தவிர்த்து அர்ச்சனா, ரோகினி, ப்ரியா மணி, சரிதா போன்றோர்). மாநிறம் மற்றும் கருமையே திராவிட மக்களின் நிஜமான நிறம் என்ற மாற்றமுடியாத கற்பிதம் கொண்டவன் நான் (எந்த தியரினை அடிப்படையாகக் கொண்டு என்றேல்லாம் கேட்ககூடாது :-) ). ஆகையினால் அந்த நிறத்தின் மீது என்றும் ஒரு தனி ஈர்ப்பு உண்டு.

ஆகையால் தான் Painting Exhibition on Dravidian Women என்ற அறிவிப்பினைப் பார்த்து குஷி அடைந்தேன். ஓவியக்காட்சி நடப்பதை தேடி அறிந்து, அங்கு சென்று ரசிக்கும் அளவுக்கு கலைத்தாகம் எல்லாம் எனக்கு இல்லை. ஆனால் இதை பார்த்தே தீரவேண்டும் என்று என் நண்பனை நச்சரித்து அழைத்துக் கொண்டு சென்றேன். லாவெல் சாலையில் இருக்கும் Abstract Art Gallery என்று அறிவிப்பில் படித்து, லாவெல் சாலையில் அப்படிப்பட்ட கேலரி இல்லை என்று அறிந்து பல்பு வாங்கிவிட்டு, அது கன்னிங்கம் சாலையில் உள்ளது என்று கொஞ்சம் கஷ்டப்பட்டு கண்டறிந்து, கேலரிக்குள் நுழைந்தோம்.

எஸ்.இளையராஜா என்ற ஓவியர் வரைந்துள்ள திராவிட பெண்கள் பற்றிய ஓவியக்காட்சி அது. தமிழ்நாட்டில் கிராமத்தில் உள்ள பெண்கள், அன்றாட வாழ்க்கையின் சில நொடிகளை, realistஆக வரைந்துள்ளார். எனக்கு இந்த இம்ப்ரெஷனிஸ்மா, க்யூபிஸாமா, பாலிமார்ஃபிஸமா என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு ஓவிய அறிவெல்லாம் இல்லை. ஆம்ஸ்டர்டாமில் நான் பார்த்த ரெம்ப்ரான் (Rembrandt) காட்சியகத்தில் இருந்த, ரெம்ப்ரான் வரைந்த ஓவியங்கள் போல இவருடைய ஓவியங்களும் realisticஆக இருந்தது. இது நான் அறிந்தவரை oil painting வகை கிடையாது.

எங்களுக்கு அனைத்து ஓவியங்களும் மிகவும் பிடித்திருந்தது. உலை வைப்பதற்காக அடுப்பூதும் பெண், முற்றத்தில் அமர்ந்து பூ கட்டிக்கொண்டிருக்கும் சிறுமி, தன் சிறு குழந்தையினை ஜன்னல் அருகில் வைத்துக்கொண்டு பராக்கு பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு அம்மா, பட்டுப்புடவை கனகாம்பர பூ அணிந்துக்கொண்டு படத்துக்கு போஸ் கொடுப்பது போன்ற ஒரு பெண் என்று சாதாரண வாழ்வின் நொடியினை அருமையாக ஓவியத்தில் பதிவு செய்திருந்தார். மிகவும் நிறைவான அனுபவம் அது. தூர நின்று பார்க்கும் போது ஜொலிக்கும் பட்டாடையின் அருகில் பார்த்தால் அது மிகவும் வித்தியாசமாக இருந்தது. இரண்டே நிறங்களை, மஞ்சள் மற்றும் கொஞ்சம் அடர்த்தியான மஞ்சள், மற்றும் அதன் காண்ட்ராஸ்ட் (contrast) கொண்டு  பட்டு போன்ற ஒரு படிமம் வந்தது மிக அருமையாக இருந்தது. (எனக்கு இதற்கு மேல் ஓவியத்தை பற்றி எல்லாம் எப்படி எழுதுவது என்று தெரியவில்லை, ஆக நிறுத்திக்கிறேன் :-) )

 

 

 

நீங்கள் பெங்களூர்வாசி என்றால், ஓவியங்கள் பார்க்க விருப்பம் இருந்தால், கண்டிப்பாக இந்த ஓவியக்காட்சியினை காண பரிந்துரைக்கிறென்.

திராவிடப் பெண்கள் – எஸ்.இளையராஜா, (Dravidian Women – S.Elayaraja)

14 – மார்ச் – 2009 வரை,  அப்ஸ்ட்ராக்ட் ஆர்ட் கேலரி (Abstract Art Gallery) , கன்னிங்கம் சாலை, பெங்களூர்

(சிக்மா மாலில் இருந்து வெகு சில மீட்டர்கள் தொலைவில் உள்ளது)

→ 9 மறுமொழிகள்பகுப்புகள்: குறிப்புகள்
குறிச்சொற்கள்: